ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆசிகளை வழங்கிய பெளத்த ஆலயம் நேற்று அதிகாலை அரச ஆதரவாளர்களால் தாக்கி சேதமாக்கப்பட்டதாக ஆலையத்தின் பிரதம பெளத்த துறவி வண அம்பலாங்கொட சிறி தம்ம தேரர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
அம்பலாங்கொட பகுதிக்கு ஜெனரல் பொன்சேகா விஜயம் மேற்கொண்டபோது எமது ஆலயத்திற்கு வந்து என்னிடம் ஆசிபெற்று சென்றிருந்தார். இதனைத் தொடர்ந்து ஆயலத்திற்குள் புகுந்த இனந்தெரியாத ஆயுதம் தாங்கிய குழுவினர் என்னை வெளியில் வரும்படி அழைத்தனர். நான் வெளியே செல்ல மறுத்ததால் ஆலயத்தைத் தாக்கி சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளனர். அவர்கள் செல்லும் போது எனக்கு எச்சரிக்கைகளையும் விடுத்து சென்றுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். நேற்று அதிகாலை ஒரு மணியளவில் அம்பலாங்கொடப் பகுதியின் போரம்ப பிரதேசத்திலுள்ள சுகத பின்ப ரமய பெளத்த ஆலயமே தாக்கிச் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
No Response to "பெளத்த ஆலயம் அடித்து நொறுக்கப்பட்டது"
Post a Comment