வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமால் லிவ்ஹே, யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மார்க் உட்பட்ட உயர் அதிகாரிகள் திடீரென இடமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேர்தல் காலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இவ் இடமாற்றம் அரசியல்வாதிகள் மத்தியில் குழப்பத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
வடக்கிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் நிமால் லிவ்ஹே உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் தலைமையகத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார். இது தொடர்பான பொலிஸ் மா அதிபரின் கடிதம் நேற்று மாலை தமக்கு கிடைத்ததாக நிமால் லிவ்ஹே குறிப்பிட்டுள்ளார்.
அவர் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத் தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி யாக செயற்பட்டு வருகிறார். இந்த நிலையில் இவர் இன்று காலை முதல் பொலிஸ் தலைமையகத்தின் கடமைகளை பொறுப்பேற்குமாறு பொலிஸ் மா அதிபரால் பணிக்கப்பட்டுள்ளார்.
எனினும் அதற்கான காரணங்கள் எவையும் தெரிவிக்கப்படவில்லை. இதேவேளை ஏற்கனவே யாழ்ப்பாண கட்டளை தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் மார்க் பங்களாதேஷிக்கு அனுப்பப்பட்டு அதற்கு பதிலாக மேஜர் ஜெனரல் மகிந்த கத்துருசிங்க யாழ். மாவட்ட கட்டளைத்தளத்பதியாக நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் வடமராட்சியில் இருந்த இராணுவ உயர் அதிகாரி ஒருவரும் கொழும் புக்கு இடமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் காலத்தில் இடம்பெறும் இவ் இட மாற்றங்கள் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப் பாகப் பேசப்பட்டது.
No Response to "பொலிஸ் இடமாற்றம் அரசியல்வாதிகள் பரபரப்பு"
Post a Comment